தொடர்புக்கு : 9487017993 ( அலுவலகம்)


                                .9360377479 ( ஆலோசனை)

காளான் வளர்ப்பு பயிற்சி இலவசமாக பிரதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைப்பெருறும். இலவச காளான் வளர்ப்பு புத்தகம் வழங்கப்படும். அரசு திட்டங்கள் மற்றும் தொழில் கடன் ஆலோசனைகள் இலவசமாக பரிந்துரைக்கப்படும்.




படுக்கை தயாரிக்கும் முறை:

பால் காளான் உற்பத்திக்கு தென்னை கீற்று கொட்டகையும், பாலிதீன் கூண்டும் தேவைப்படும் விதை தயாரிப்பு மற்றும் படுக்கை தயாரிக்கும் முறைகள் சிப்பிக்காளானைப் போன்றதாகும். மூலவித்து தயாரிக்க பால் காளான் திசுவை சோதனைக் குழாயில் வளர்க்க வேண்டும். இதிலிருந்து தாய் வித்து மற்றும் படுக்கை வித்துக்களை தயாரிக்க வேண்டும். பால் காளான் வளர்ப்பிற்கு சிப்பிக் காளான் போன்றே உருளை வடிவ படுக்கைகளை தயார் செய்து தென்னை கீற்று கொட்டகைகளுக்குள் தொங்க வி வேண்டும். பூசணம் நன்கு பரவியபின் படுக்கைகளை குறுக்காக இரண்டாக வெட்டியின் மண் பூச்சுக்கலவையிட்டு பாலீதின் கூண்டுக்குள் வைக்க வேண்டும்.


காளான் வளர்க்கும் அறை

காளான் படுக்கைகளை அடுக்குமுறை உருளைப்படுக்கை களாக தயார் செய்து கீற்றுக் கொட்டகைகளுக்குள் தொங்க விட வேண்டும். இவ்வறையின் வெப்பநிலை 25-30 செல்சியஸ் ஆக இருக்க வேண்டும்.

படுக்கைகள் 10-15 நாட்களில் வெண்மை நிறம் அடைந்தவுடன் சம அளவுள்ள இரண்டு படுக்கைகளாக நடுவில் வெட்டிவிட வேண்டும்ஒவ்வொரு அரை படுக்கையின் மேல் சுமார் 1-2 செ.மீட்டருக்கு மேற்பூச்சு கலவையை சமமாக இட வேண்டும்மேற்பூச்சு கலவையை கீழ்கண்ட முறையில் தயாரிக்க வேண்டும்.

மேற்பூச்சு கலவை தயா ரிக்க கரிசல் மண் (கார அமில நிலை 8.0 இருக்க வேண்டும்) இந்நிலை கொண்டு வர சுண்ணாம்பு அதாவது கால்சியம் கார்பனேட் ஒருகிலோ மண்ணிற்கு 10 கிராம் என்ற அளவில் சேர்க்க வேண்டும். லேசாக தண்ணீர் தெளித்து மண்ணணை 20 இராத்தல் அழுத்தத்தில் வெப்ப மூட்டியில் ஒன்றரை

மணி நேரம் தொற்று நீக்கம் செய்ய வேண்டும். சூடு ஆறியபின் தொற்று நீக்கம் செய்த மண்ணை மேற்பூச்சுக்காக பயன்படுத்தலாம்மேற்பூச்சு கலவை இட்டபின் படுக்கைகளை பாலித்தீன் கூண்டிற்குள் வைத்து பராமரிக்க வேண்டும்படுக்கையின் மீது லேசான தண்ணீர் தெளித்து வர வேண்டும். ஒரு வாரத்தில் வெண்மை நிற காளான் பூசண இழைகள் மேற்பூச்சு மண் உறையின் மேல் படரும்அதன்பின் ஒரு வா ரத்தில் காளான் மொட்டுக்கள் தோன்றும். இவை வளர்ந்து ஒரு வாரத்தில் அறுவடைக்குத் தயாராகிவிடும். தொடர்ந்து தண்ணீர் தெளித்து வந்தால் 5-7 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது அறுவடைகள் கிடைக்கும்.


காளான் உற்பத்தியில் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள்

நெல் வைக்கோல் தரமானதாகவும் பொன் நிறத்துடனும் பூச்சி மற்றும் நோய் தாக்காதவாறும் இருத்தல் வேண்டும்காளான் படுக்கை தயாரிக்கும் போது வைக்கோலின் ஈரப்பதம் 65 சதவிகிதம் இருக்குமாறு பராமரிக்கப்பட வேண்டும். ஈரப்பதம் அதிகமானால் பாக்டீரியா நோய் மற்றும் பூச்சிகளின் தாக்குதல் காணப்படும்காளான் வளர்ப்பு அறையில் சிப்பிக் காளானு்ககு 25-30o செல்சியஸ் வெப்பமும் பால் காளானிற்கு 35-40o வெப்பமும் இருத்தல் வேண்டும். வெப்பநிலை அதிகரித்தால் காளான்கள் உலர்ந்து நிறம் மாறி வளர்ச்சி குன்றி காணப்படும்.

காளான் வளர்ப்பறையை சுத்தமாக பராமரித்தல் அவசியம். பதினைந்து நாட்க்ள இடைவெளியில் படுக்கைகளை வேற்று அறைக்கு மாற்றம் செய்து விட்டு பொட்டாசியம் பெர்மாங்கனேட் மற்றும் பார்மலின் 1:2 என்ற விகிதத்தில் புகைமூட்டமும் ஏற்படுத்த வேண்டும்வேற்றுப் பூசணம் மற்றும் பூச்சி தாக்குதல் உள்ள படுக்கைகளை உடனே அப்புறப்படுத்தி விட வேண்டும். இதனால் மேலும் பரவுவதைத் தடுக்கலாம்நன்கு வளர்ந்த காளான்களில் இழைகள் நன்கு விரிந்து காணப்படும். இந்நிலையில் அறுவடை மேற்கொள்ள வேண்டும். அறுவடை தாமதித்தால் காளான்களை அழுகி அதன் மூலம் பாக்டீரியா நோய் குடில் முழுவதும் பரவிவிடும் காளனிற்கு இடும் மேற்பூச்சு மண்ணை சரியாக 20 இராத்தல் அழுத்தத்தில் ஒன்றறை மணி நேரம் தொற்று நீக்கம் செய்ய வேண்டும். இதனை சரியாக செய்ய விட்டால் வெற்று பூசண தாக்குதல்கள் காணப்படும்காளான்கள் பறித்தவுடன் படுக்கையின் மேல் தண்ணீர் தெளித்தல் வேண்டும். காளான்களின் மேல் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் பாக்டீரியா நோய் உருவாகி அழுகிவிடும்காளான் குடிலுக்குள் செல்லும் வேலையாட்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.


இலவச புத்தகத்தை பெருவதற்க்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

Book Download