சுபிக்க்ஷம் அசோசியேட்ஸ்

மயிலாடுதுறை

(இது ஒரு அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனம்)

__________________________________________________________________________

ரூபாய் 1 லட்சம் மானியம் - உங்கள் பகுதியில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை உடனே தொடர்பு கொள்ளவும்.


கோவை மாவட்டம், அன்னூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவை அன்னூர் வட்டாரத்திற்குட்பட்ட விவசாயிகள் மற்றும் பெண்கள் நீங்கள் வேறு மாவட்டம் அல்லது வட்டாரத்தை சார்ந்தவர்கள் என்றால் உங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்புக்கொள்ளவும், 

அறிவிப்பின் படி சமுதாயம் மற்றும் பொருளாதாரத்தில் மேம்பட தோட்டக்கலைத்துறை சார்பில் சிறிய அளவிலான காளான் வளர்ப்பு பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதில் 600 சதுர அடி பரப்பளவில் காளான் பண்ணை அமைக்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த இடம் அல்லது குத்தகை நிலம் வைத்திருக்கும் பெண்கள் மற்றும் வேலைவாய்பற்ற இளைஞர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

மேலும் சாகுபடி செய்த காளான்களை புறநகர் பகுதியில் சந்தைப்படுத்துதல்  அல்லது கடைகள், வனிக வளாகங்கள் மூலம் ஒரு நாளைக்கு ரூ.1000 முதல் ரூ.3000 வரை வருமானம் பெறலாம். மேலும் காளான் பயிரில் அதிக ஊட்டச்சத்து உள்ளதால் அதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. 

ஆகவே  இந்தத் திட்டத்தில் பயன்பெற  விரும்புபவர்கள் உங்கள் பகுதியில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

நன்றி தினதந்தி

மே 4 : 2023